நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை: நீர்நிலைகளின் நீர்மட்ட அளவில் அதிகரிப்பு
நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த கடும் மழை காரணமாக பல நீர்நிலைகளின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.
களனி கங்கையில் (Kelani Ganga) நிறுவப்பட்டுள்ள நீர்மானியின் அளவீட்டுக்கமைய, இன்று (19.05.2024) 91.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்நிலையில், களனி கங்கைக்கு அருகிலுள்ள ஹங்வெல்ல நீர்மானியின்படி, 77.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ள அதேவேளை, கொழும்பில் (Colombo) நிறுவப்பட்டுள்ள நீர்மானியில் 58.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
அதிக மழைவீழ்ச்சி
அதேவேளை, களுகங்கைக்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள நீர்மானியில் 51.4 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கலவெல்லவ மில்லகந்தவில் 45.9 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிங் (Gin) கங்கையை அண்மித்துள்ள பத்தேகமவில் 63.6 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் தவலமவில் 21.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் மாதுரு ஓயாவை அண்மித்த பதியத்தலையில் மழைவீழ்ச்சி 61.3 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் கண்டறியப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி, மகாவலி (Mahaweli) ஆற்றின் கரையோரமாக உள்ள வேரகங்தோட்டையில் 55.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் மா ஓயா, யக்கா ஏரியில் 54 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 5 மணி நேரம் முன்

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan

போதைப் பொருள் வழக்கில் கைதான ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்படிபட்டவர்கள்... சீமான் பரபரப்பு பேச்சு Cineulagam

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan
