கோட்டாவுக்கு எதிரான கொலை முயற்சி: சந்தேகநபரின் வாக்குமூல ஆவணத்தை காணவில்லை
கொழும்பு-கொள்ளுப்பிட்டி பித்தல சந்தியில் வைத்து பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவை படுகொலை செய்ய முயற்சித்ததாக தொடரப்பட்ட வழக்கின் பிரதான குற்றவாளியான பொன்னுசாமி கார்த்திகேசு சிவாஜி, பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலம் அடங்கிய அசல் ஆவணம் காணாமல் போயுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில், இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கிராண்ட்பாஸ் பொலிஸ்நிலைய விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த குற்றவாளியின் வாக்குமூல அசல் ஆவணம், மூத்த அதிகாரிகளின் பதிவு புத்தகத்தில் சட்டப்படி ஒட்டப்பட்டிருந்தது.
எனினும், அந்த வாக்குமூலத்தை ஆதாரமாக முன்வைக்க அரசுத் தரப்பு ஆயத்தமானபோது, அசல் ஆவணம் பொலிஸ் காப்பகத்தில் இல்லை என்பது தெரியவந்தது.
அசல் ஆவணப் புத்தகத்தின் குறிப்பு
இந்தநிலையில், பதிவுப் புத்தகங்கள் காலாவதியாகும்போது அவை அழிக்கப்படும் என்றும், ஆனால் அவை அழிக்கப்படுவதற்கு முன்னர், அது குறித்த குறிப்புகள் பதிவு செய்யப்படும் என்றும் கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலைய விசேட புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், குறித்த அசல் ஆவணப் புத்தகத்தின் குறிப்பு எதுவும் பொலிஸாரின் காப்பகத்தில் இல்லை என்று அவர் மன்றில் தெரிவித்தார்.
இந்தநிலையில் அரசு தரப்பில் முன்னிலையான பிரதி மன்றாடியார் நாயகம், சம்பந்தப்பட்ட பதிவு புத்தகம் தவறியுள்ளமையால்;, அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரிடம் ஆலோசித்து நீதிமன்றத்திற்கு தெரிவிப்பதாக அறிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இருதய நிலக் கோட்பாடும் மத்திய கிழக்கு யுத்தமும் 4 மணி நேரம் முன்

கழுத்தை பிடிக்கும் கடன்! விடாது விரட்டும் ஏழரை சனி.. தப்பிக்கும் 5 ராசியினர்- இன்றைய ராசிபலன் Manithan

இந்தியாவில் நிற்கும் F-35B போர் விமானத்தை செயற்கைகோள் மூலம் கண்காணித்துவரும் பிரித்தானிய ராணுவம் News Lankasri

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan
