முக்கிய வழக்கிலிருந்து ஜனாதிபதி ரணில் நீக்கம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்யுமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிபதி மகேஷா டி சில்வா நேற்று (01.03.2023) அறிவித்துள்ளார்.
இழப்பீடு கோரி தாக்கல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்கத் தவறியதன் காரணமாக பாதிக்கப்பட்ட 108 பேர் தங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு கோரி தாக்கல் செய்த வழக்கின் பிரதிவாதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிடப்பட்டிருந்தார்.
இந்த வழக்குகள் முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ரணில் விக்ரமசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் பூர்வாங்க ஆட்சேபனையை முன்வைத்து, தமது கட்சிக்காரர் தற்போது ஜனாதிபதியாக இருப்பதால், அரசியலமைப்பின் கீழ் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Viral Video: இந்த பை போதுமா? திருமணம் முடிந்த கையோடு ஐயர் பார்த்த வேலை.. கேமராவில் சிக்கிய காட்சி Manithan

அடுத்த 10 ஆண்டுகளில் தங்கம், வெள்ளியை விட இதற்கு தான் மதிப்பு அதிகம்.., கோடீஸ்வரரின் நம்பிக்கை News Lankasri

இந்திய இராணுவத்திற்கு உயர்தர ஏவுகணைகளை வழங்கவுள்ள ரிலையன்ஸ் - ரூ.10,000 கோடி லாபம் எதிர்பார்ப்பு News Lankasri
