‘‘ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையில் ஏமாற்றமே தவிர எவ்வித மாற்றமுமில்லை’’

Government Parliament President Farmers
By Dias Jan 21, 2022 05:06 PM GMT
Report
Courtesy: ஜி. ஸ்ரீநேசன்

ஜனாதிபதியின் விளக்கவுரை எவ்வாறு அமையும் எனப்பல எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியிலிருந்தது. ஆனால் ஜனாதிபதியின் உள்ளத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.அவரது உள்ளம் ஓரினம் சார்பாகவே இருக்கின்றது.

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது கொள்கை விளக்கவுரையினை ஜனாதிபதி 18/01/ 2022 அன்று நிகழ்த்தினார். இக்கால சூழ்நிலையில் அவரது உரை எவ்வாறு அமையும் எனப்பல எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியிலிருந்தது. 

குறிப்பாகத் தமிழர்கள் மத்தியில் இனப்பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியின் மனதில் மாற்றம் ஏற்பட்டிருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பேச்சுக்கு அழைப்பார் என்றெல்லாம் ஊடகங்கள் ஊகங்களைப் பிரசுரித்தன. ஆனால் ஜனாதிபதியின் உள்ளத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

அவரது உள்ளம் ஓரினம் சார்பாகவே இருக்கின்றது என்பது அவரது பேச்சில் வெளியாகியது. சிங்கள பௌத்தர்களின் தலைவர் என்ற சிந்தனைத் தளத்திலிருந்து அவர் மாறமாட்டார். தான் பல்லின மக்களின் தலைவர் என்பதை அவர் புரிய மாட்டார் என்பது புலனாகியது. விடுதலைப் புலிகளின் தலைவர் குறிப்பிட்ட கருத்தொன்று நிரூபணமாகியது.

அதாவது சிங்களத் தலைவர்கள் தமிழர்களின் பிரச்சினைகளைப் புரிந்து கொள்வார்கள் அதனைத் தீர்ப்பார்கள் என்று தமிழர்கள் நினைப்பது முட்டாள்தனமான சிந்தனையாகவே இருக்கும் என்று எதிர்வு கூறியிருந்தார்.

அந்த வரலாற்றுப் பட்டறிவினை ஜனாதிபதி மீண்டும் ஒரு தடவை மெய்ப்பித்திருந்தார். 74 ஆவது சுதந்திர தினத்தை நோக்கிச் சிங்களத் தலைவர்கள் நகர்ந்தாலும் இனப்பிரச்சினை விடயத்தில் அக்கறையற்றவர்களாகவே இருக்கின்றார்கள் என்பது புலனாகிறது.

மேலும் உள்நாட்டுப் பொறிமுறையால் இனப்பிரச்சினையைத் தீர்க்கும் ஆளுமை,சக்தி இலங்கைத் தலைவர்களிடம் இல்லை என்பதை உணர முடிகிறது.

இந்த நிலையில் தமிழ்த் தலைவர்கள் உறுதியான முடிவுக்கு வர வேண்டும். எமது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரே வழிமுறை சர்வதேச அணுகுமுறைதான் என்பதை உணர்ந்து அதற்கு ஏற்ப தமது அணுகு முறைகளை வேகமாகவும், விவேகமாகவும் நகர்த்த வேண்டும். ஜனாதிபதி அழைப்பார்,பேசுவார், தீர்ப்பார் என்றெல்லாம் நினைப்பது ஏமாற்று வேலையாகவே அமையும்.

எனவே உள்நாட்டில் பிரச்சினையைத் தீர்ப்பதற்குச் சிங்கள ஆட்சியாளர்களால் முடியாது என்பது மட்டும் தெளிவான உண்மையாகும். அப்படி இந்த சிங்களத் தலைமைகள் அழைத்தாலும் தமிழ் மக்களை மட்டுமல்ல சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயலாகவே அமையும். தமிழர்களின் பிரச்சினை என்பது அபிவிருத்தி மாத்திரம்தான்.

அதனைத் தீர்த்து விட்டால் தமிழர்கள் சரணாகதியாகி விடுவார்கள் என்று ஜனாதிபதியும், அவரது அரசாங்கத்தினரும் நினைக்கிறார்கள். இப்படியான கருத்தினை முன்பொரு தடவை முக்கியமான அமைச்சர் ஒருவர் அப்போது எதிர்க்கட்சியிலுள்ள போது உரையாடும் வேளையில் என்னிடம் கூறியிருந்தார்.

அதற்குச் சாதகமாக அதாவது ஜனாதிபதியின் உரைக்குச் சாதகமாக பிழைப்புவாத உழைப்புவாத அரசியல்வாதிகள் சிலர் அடிப்படைவாதிகளோடு இணைந்து மல்லியை மலையாகக் காண்பிப்பது போன்று பிரசாரம் செய்கிறார்கள். இதற்கு உதாரணமாகக் கொள்கை விளக்கவுரைக்குச் சாதகமாகத் துதிபாடுகிறார்கள்.

பாவம் அவர்களது பதவியைத் தக்கவைத்துக் கொள்வதற்காக மக்களைப் பகடைக்காய்களாக உருட்டி விளையாடுகிறார்கள். அமைச்சர் டக்ளசின் கருத்துப்படி சாதகமானதைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றார். அடிப்படைவாதிகள் தரமறுக்கின்ற உரிமைகளைச் சாத்தியமற்றவை என்று கருதி விட்டுவிட வேண்டும் என்பதே அவரது நிலைப்பாடாகும்.

மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற இவரது கருத்தினை பேரினவாதிகள் ஏற்கமாட்டார்கள் என்பதால் சாத்தியமற்றது என்று வீசி விட்டார் இவர். இப்படியாகப் பேரின அடிப்படை வாதிகளோடு ஒட்டி உறவாடி அவர்களை தமது அமைச்சர் பதவித் தேவைக்காக நியாயப்படுத்துவது மக்களை மறந்த சுயலாப நிலைப்பாடாகும்.

இதனை மக்கள் புரிய வேண்டும். வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ்க் கட்சிகள் தமது நிலைப்பாட்டைத் தற்காலிகமாகவேனும் மாற்றித் தன்னோடு ஒத்துழைக்குமாறு ஜனாதிபதி கேட்டிருக்கின்றார். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினை பொதுவானது என்றார்.

அப்படியென்றால் இனப்பிரச்சினைத் தீர்வு விடயம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதி விடயம், காணி அபகரிப்பு விடயம், வடக்கு கிழக்கில் திட்டமிட்ட பேரின வாதக்குடியேற்றம், அரசியல் கைதிகள் விடயம், அரசுக்கு எதிரான ஜனநாயக செயற்பாடுகள், மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் இவற்றையெல்லாம் கைவிட்டு தமிழ்த் தேசியக் கட்சிகள் கைகட்டி வாய் பொத்தி நிற்கவேண்டும் என்று ஜனாதிபதி எதிர்பார்க்கின்றாரா? என்பதுதான் சொரணையுள்ள தமிழர்களின் கேள்வியாகும்.

கற்றுக்குட்டிகள், கட்டுப்பட்ட பொம்மையர்கள் வெறும் பதவிகளுக்காக உழைப்புக்காக கை கட்டி வாய் பொத்தி நின்று துதி பாடலாம். ஆனால்,உண்மையான தமிழ்ப் பிரதிநிதிகள் இவற்றைச் செய்ய முடியாது.

ஒட்சிசன் இன்றியும் வாழ்வார்கள் பதவியில்லாமல் வாழ்வார்கள் என்கின்றவர்களுக்கு ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை தித்திக்கலாம்.

ஆனால் தமிழர்களுக்கு ஏமாற்றத்தைத்தவிர எம்மாற்றத்தினையும் இந்தக் கொள்கை விளக்கவுரை அளிக்கவில்லை.இதனைத்தான் உப்புச்சப்பற்ற உதவாத குப்பை உரையென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் ஐயா குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி நாட்டை முழுமையாகக் கடன் பொறிக்குள் சிக்க வைத்து நாட்டின் சொத்துக்களையும், இறைமையையும் இழந்தாலும் தமிழர்களின் உரிமையைத்தானாக வழங்க மாட்டார் என்பது மட்டும் உண்மையாகும்.

எனவே ஜனாதிபதியின் அழைப்பைத் தமிழத் தலைவர்கள் எதிர்பார்க்காமல் சர்வதேச அணுகுமுறைகளைக் கையாள்வதொன்றே சரியான நிலைப்பாடாகும்.

இந்நிலையில் தமிழ்க் கட்சிகள் தமக்குள் காணப்படும் தன்முனைப்புச் சிந்தைகளைத் தள்ளி வைத்துவிட்டு தமிழ் மக்களுக்காக ஒற்றுமையாகி உழைக்க வேண்டும் என்பதே தமிழர்களின் ஏகோபித்த விருப்பமாகும்.

எவரும் தன்முனைப்பான முரண்பாடான கருத்துக்களைக் கொட்டி தமிழர் ஐக்கியத்தினைச் சிதைக்காமல் இருக்க வேண்டியது அவசியமாகும். அண்ணன் எப்போது சாவார் திண்ணை எப்போது காலியாகும் என்ற சுயநல அரசியலையும் தமிழ்த் தலைவர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

சிங்கள பௌத்த சிந்தனைத் தளத்தால் உருவாக்கப்பட்ட இராணுவ மயப்பட்ட சிந்தனையில் ஊறியுள்ள பிடிவாதப்போக்குடைய நாட்டின் தலைவரிடம் இருந்து தமிழர்கள் எதனையும் எதிர்பார்க்க முடியாது என்பதே உண்மையாகும்.

விவசாயிகளின் சாதாரண உரப்பிரச்சினையையே விளங்கிக் கொள்ள முடியாத தலைவர்கள் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். அப்படி எதிர்பார்த்தால் அது தமிழர்களின் தவறாகவே இருக்க முடியும்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. ஸ்ரீநேசன் 

மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, New Jersey, United States, Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, London, United Kingdom

24 May, 2026
மரண அறிவித்தல்

தொல்புரம், கெருடாவில்

21 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஜேர்மனி, Germany, Scarborough, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில் தெற்கு, Stuttgart, Germany, Scarborough, Canada

10 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்டுவான், Hayes, United Kingdom

29 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், புதுறோட், வவுனியா

30 May, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
மரண அறிவித்தல்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Lusaka, Zambia, மஹிகெங், Mahikeng, South Africa

26 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, யாழ்ப்பாணம், நல்லூர், கொக்குவில், Northolt, United Kingdom

23 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கொக்குவில் கிழக்கு, Markham, Canada

29 May, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US