செம்மணி ஊடாக பயணித்தும் கீழே இறங்காமல் சென்ற ஜனாதிபதி!

Jaffna Anura Kumara Dissanayaka Ramalingam Chandrasekar chemmani mass graves jaffna
By Dev Sep 02, 2025 06:21 PM GMT
Report

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வடக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில், பலரும் எதிர்பார்த்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் செம்மணி விஜயம் நடைபெறவில்லை.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்றையதினம்(02.09.2025) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது, அவர் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்திற்கு விஜயம் செய்வார் என அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு தரப்பின்னராலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

யாழில் மக்களுடன் ஏற்பட்ட முரண்பாடு: அலட்சியமாக பதில் கூறிய தேசிய மக்கள் சக்தி தரப்பு..!

யாழில் மக்களுடன் ஏற்பட்ட முரண்பாடு: அலட்சியமாக பதில் கூறிய தேசிய மக்கள் சக்தி தரப்பு..!

தமிழர் தரப்பு ஏமாற்றம்

முன்னதாக, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் ஜனாதிபதி செம்மணிக்கு விஜயம் செய்வார் எனக் கூறியிருந்தார்.

எனினும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செம்மணி வீதியை கடந்து பயணித்த போதிலும், செம்மணி மனித புதைகுழியை சென்று பார்வையிடவில்லை என பொது ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.

நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில் வைத்து உரையாற்றும் போது, செம்மணி அகழ்வு இடைநிறுத்தப்படமாட்டாது என்றும், செம்மணி தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும், நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.


இதனையடுத்து ஜனாதிபதியின் செம்மணி நோக்கி பயணம் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அங்கு செல்லாமல் அதனை கடந்து சென்றமை தமிழர் தரப்பை ஏமாற்றமடையச் செய்துள்ளது.

இதேவேளை, செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் இலங்கையின் பெரும்பான்மையின சிங்கள மக்களிடத்தில் இருவகையான போக்கு காணப்படுகின்றது.

சில தரப்பினர் செம்மணி பெரும் அழிவு என்றும், செம்மணி மனித புதைகுழி, அதில் புதையுண்டவர்கள் தொடர்பில் நியாயமான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாலும் பெரும்பான்மையானோர் செம்மணி தொடர்பில் எதிரான மன நிலையிலேயே இருக்கின்றனர்.  

இனவாதம் 

இவ்வாறான நிலையில், இலங்கையில் ஆட்சியதிகாரத்தை தீர்மானிக்கும் சக்திப் படைத்த சிங்கள மக்களை திருப்திப்படுத்த வேண்டிய கட்டாயமும் அநுரவுக்கு ஏற்பட்டிருப்பதுடன், வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களின் வாக்குகளையும் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய தேவை அவருக்கு காணப்படுகின்றது.

எனவேதான், செம்மணியை சென்று பார்வையிட்டால் சிங்கள மக்களிடத்தில் அது சலசலப்பை ஏற்படுத்தலாம் என்று கருதி ஜனாதிபதி செம்மணியை தவிர்த்து விட்டுச் சென்றிருக்கலாம் என்று அரசியல் பரப்பில் பேசப்படுகின்றது.

செம்மணி ஊடாக பயணித்தும் கீழே இறங்காமல் சென்ற ஜனாதிபதி! | President Passes Through Chemmani

இதேவேளை, இன்றையதினம் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, அங்கு இனவாதம் குறித்து கதைத்திருந்தார்.

தோல்வியடைந்த அரசியல்வாதிகளே இனவாதம் குறித்து பேசி மக்களை திசைதிருப்ப முயல்வதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார். மேலும், இனவாதத்தை முற்றிலும் ஒழிக்க எந்தவொரு எல்லைக்கும் செல்ல தயார் என அவர் உறுதியளித்திருந்தார்.

இவ்வாறிருக்க, சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ள தமிழர்களின் படுகொலை நடந்த இடத்தில் ஜனாதிபதி இறங்காமல் சென்றது அவரின் இனப்பிரச்சினை குறித்த நிலைப்பாட்டையே கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

காணொளி - தீபன்

மகிந்தவை கைது செய்தால் 400 ஆண்டுகள் சிறை!

மகிந்தவை கைது செய்தால் 400 ஆண்டுகள் சிறை!

பாதாள உலகக் கும்பலுடன் சிக்கப் போகும் நாமல் - கடும் அச்சத்தில் உதய கம்மன்பில

பாதாள உலகக் கும்பலுடன் சிக்கப் போகும் நாமல் - கடும் அச்சத்தில் உதய கம்மன்பில

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US