மகிந்தவை கைது செய்தால் 400 ஆண்டுகள் சிறை! இரகசியங்களை அம்பலப்படுத்தும் பொன்சேகா..
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கைது செய்யப்பட்டு 400 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தின் போது நடந்த கடுமையான ஊழல்கள் காரணமாக மகிந்தவை இவ்வாறு கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
2010 மகிந்தவின் விஜயம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சீனாவிற்கு 2010 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச மேற்கொண்ட பயணத்தின் போது 65 பேர் ஸ்ரீலங்கன் விமானசேவை விமானத்தில் அதிகாரபூர்வமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ரணில் விக்ரமசிங்க விடயத்தில் அரசாங்கம் நடந்து கொண்ட முறையை நான் நான் வரவேற்கின்றேன். ரணில் விக்ரமசிங்க செய்தது சரி என்று நான் கூறவில்லை. அவரது நிலையைப் பார்க்க எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர்தான் என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தவர்.
ஆனால் இந்த வழக்கில், இந்த அரசாங்கம் அமைத்த முன்னுதாரணத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். அந்த முன்னுதாரணத்தின் அடிப்படையில், மகிந்த ராஜபக்ச போன்றவருக்கு சுமார் 400 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
என்னுடைய நெருங்கிய கூட்டாளிகளாக இருந்தவர்கள் என்பதால், ஜெனரல்கள், பிரிகேடியர்கள், மேஜர்கள் மற்றும் கேணல்கள் உட்பட 35 மூத்த இராணுவ அதிகாரிகளை ஓய்வூதியம் இல்லாமல் இராணுவ சேவையிலிருந்து மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெளியேற்றியது என குறிப்பிட்டுள்ளார்.





வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri

தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
