காலிமுகத்திடல் விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான பிரித்தானிய பெண்: ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு

Galle Face Protest Ranil Wickremesinghe United Kingdom Department of Immigration & Emigration
By Mayuri Aug 22, 2022 05:56 AM GMT
Report

காலிமுகத்திடல் போராட்டத்துக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்கள் மூலம் பகிர்தலை மேற்கொண்டு சர்ச்சைக்கு உள்ளான பிரித்தானிய இன்ஸ்டாகிராமர் கெய்லி பிரேசரை உடனடியாக இலங்கையிலிருந்து வெளியேற்றுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளதாக குடிவரவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரித்தானிய சுற்றுலாப் பயணியை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கான ஆவணங்களில் கடந்த வாரம் ஜனாதிபதியும் கையொப்பமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

குடிவரவு அதிகாரிகள் குழு விசாரணை

ஆகஸ்ட் 2ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள அவரது இல்லத்துக்கு சென்ற, குடிவரவு அதிகாரிகள் குழுவொன்று, பிரேசரின் பயண ஆவணங்களை விசாரணைக்காக திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறும், ஏழு நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறும் அவருக்கு அறிவித்துள்ளது. 

காலிமுகத்திடல் விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான பிரித்தானிய பெண்: ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு | President Orders Removal Of British Lady From Sl

எனினும் குடிவரவு அதிகாரிகள் கெய்லி பிரேசரின் இல்லத்தில் எப்படி விசாரிக்கிறார்கள் என்பதை காட்டும் வகையில் அவரால் எடுக்கப்பட்ட நேரடி காணொளியொன்று வெளியாகியிருந்தது. 

இது பல தளங்களில் வைரலாகி, காலிமுகத்திடலில் நடந்த நிகழ்வுகளை ஆவணப்படுத்தியதற்காக ஒரு சுற்றுலாப் பயணியை அரச அதிகாரிகள் கைது செய்ய முயற்சிக்கிறார்கள் என்ற சர்ச்சையை உருவாக்கியது.

இலங்கையை விட்டு வெளியேற காலக்கெடு

இத்தனையடுத்து விசாரணையை எதிர்கொள்வதற்காக ஆகஸ்ட் 11ஆம் திகதி பிரேசர் குடிவரவுத் தலைமை அலுவலகத்திற்கு வந்தபோது அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதுடன், ஆகஸ்ட் 15ஆம் திகதி அல்லது அதற்கு முன்பாக சட்டப்பூர்வமாக இலங்கையை விட்டு வெளியேறுமாறு அதிகாரிகள் காலக்கெடுவை வழங்கினர்.

இருப்பினும், அவர் மேலும் நாட்டில் இருக்க விரும்புவதாகக் கூறி குடிவரவுத் திணைக்களத்தின் உத்தரவை செல்லுபடியாகாத படி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

எவ்வாறாயினும், அத்தகைய கோரிக்கைக்கு எந்த காரணமும் இல்லை என்று கூறி இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காலிமுகத்திடல் விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான பிரித்தானிய பெண்: ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு | President Orders Removal Of British Lady From Sl

இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன், பிரேசர் காணாமல்போயுள்ளதாகவும், தாம் கைது செய்யப்படுவதை அவர் தவிர்த்து வருவதாகவும் குடிவரவுத் துறை தரப்புகள் தெரிவித்தன.

விசாவில் தெரிவிக்கப்பட்டிருந்த விடயம்

குடிவரவுத் துறை தகவல்களின்படி, மருத்துவ காரணங்களுக்காக 2019ஆம் ஆண்டு அவர், இலங்கைக்கு வந்திருந்தார். விசா விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளில் முதுகுவலியால் அவதிப்படுவதாகவும், சுதேச மருந்துகளை நாடியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதிகாரிகள் சமீபத்திய விசாரணைகளை நடத்தியபோது, ​​அந்த வெளிநாட்டவர் விசாவில் கூறியபடி சுதேச மருத்துவத்தை நாடவில்லை எனவும், மாறாக மருந்துகளின் பல்வேறு விளம்பரப் பணிகளிலும், உளவியல் மற்றும் வயது வந்தோருக்கான உறவுப் பிரச்சினைகள், போதைப்பொருள் தொடர்பான சிகிச்சையாளராக இருந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்தச் சேவைகளை மேம்படுத்துவதற்காக ஒரு இணையதளத்தைப் பயன்படுத்திய அவர், மனநல மருத்துவத்தில் நிபுணர் மற்றும் குணப்படுத்துபவர் என்றும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். 

இலங்கையிலிருந்து வெளியேற கேட்டுக் கொள்ளப்பட்டமைக்கான காரணம்

காலிமுகத்திடல் விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான பிரித்தானிய பெண்: ஜனாதிபதி பிறப்பித்துள்ள உத்தரவு | President Orders Removal Of British Lady From Sl

விசா நிபந்தனைகளை மீறியதாலேயே இலங்கையை விட்டு வெளியேறுமாறு அவர் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், காலிமுகத்திடல் போராட்டத்தில் அவர் ஈடுபட்டதாக விசாரணை நடத்தி வருவது உண்மைக்குப் புறம்பானது என்றும் குடிவரவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், காணாமல்போன சுற்றுலாப் பயணியை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு உதவுமாறு குடிவரவுத் திணைக்களம் பொதுமக்களையும், பொலிஸாரையும் கோரியுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக குடிவரவு குடியகழ்வு பிரதி கட்டுப்பாட்டாளர் எம்.ஜி.வி.காரியவசம் மற்றும் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, கொழும்பு 13

24 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுடை, நல்லூர், Scarborough, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், நாயன்மார்கட்டு

30 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

28 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US