ஜனாதிபதி ரணில், சிங்கப்பூர் பிரதமருடன் சந்திப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சிங்கப்பூர் பிரதமர் லீ சென் லூ உடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஜப்பானின் முன்னாள் பிரதமரின் இறுதி கிரியை
ஜப்பானின் முன்னாள் பிரதமர் சீன் ஷோ அபேவின் இறுதி கிரியைகளில் பங்கேற்பதற்காக இலங்கை ஜனாதிபதி நேற்று (26.09.2022) ஜப்பான் புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்த நிலையில் இறுதி கிரியைகளில் பங்கேற்பதற்காக வருகை தந்திருந்த சிங்கப்பூர் பிரதமருடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி குறித்து பேச்சுவாரத்தை
மேலும் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யொஷிமாஷா ஹயாஷியுடனும் ரணில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.

நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலைமைகள் உருவாகியுள்ள நிலையில் ஜனாதிபதி உலகத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகருடன் Living In Relationnல் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நடிகை... பிரபலம் ஒபன் டாக் Cineulagam
சூட்கேஸில் இருந்தது மனித சடலம் அல்ல: உயர் ரக செக்ஸ் பொம்மை: அவுஸ்திரேலிய பொலிஸார் விளக்கம் News Lankasri