ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்!: தமிழ்க் கட்சிகளைக் கைகோர்க்குமாறு வஜிர அழைப்பு
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவே பொதுவேட்பாளராகக் களமிறங்கவுள்ளார் என்றும் அவருடைய தலைமையின் கீழ் தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களிடம் மேலும் தெரிவித்த அவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது ரணில் விக்ரமசிங்கவே பொதுவேட்பாளராகக் களமிறங்கவுள்ளார்.
இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ளவர்களில் 90 வீதமானவர்கள் ரணில் விக்ரமசிங்க வேட்பாளராகக் களமிறங்குவதையே விரும்புகின்றனர்.
வேட்பாளராக ராஜபக்சக்கள்
ராஜபக்சக்களில் எவரும் ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ வருவதை மக்கள் விரும்ப மாட்டார்கள்.
கடந்த வருடம் இடம்பெற்ற சம்பவங்களை எவரும் மறக்காமல் இருந்தால் நல்லது.
ரணில் விக்ரமசிங்கவைப் பலப்படுத்த அனைவரும் கட்சி வேறுபாடின்றி இணைய வேண்டும் என வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்துக்கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
