ஞானசாரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு - வெளியாகியுள்ள தகவல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) பிரதான தொனிப்பொருளாக தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதியான “ஒரே நாடு ஒரே சட்டம்” எனும் எண்ணக்கருவை நடைமுறைப்படுத்தும் முகமாக ஜனாதிபதி செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் (Galagoda aththe Gnanasara Thero) தலைமையில் 13 பேரை உள்ளடக்கியதாக இந்த செயலணி அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த செயலணிக்கு இலங்கையிலுள்ள ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை செயற்படுத்துதல் தொடர்பாக கற்றாராய்ந்து அதற்காக சட்டவரைவொன்றை தயாரித்தல் மற்றும் நீதி அமைச்சினால் இதுவரை இதற்குரியதாக தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவுகள், தகுந்த திருத்தங்கள் இருப்பின் அதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பித்தலும் ஏற்றவாறு உரிய வரைவில் உள்ளடக்குதல் போன்ற பிரதான இரு பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,