சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும் ஜனாதிபதி அநுரவின் புகைப்படம்
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது தாயை சென்று பார்த்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது.
ஜனாதிபதியின் தாயார், சுகயீனம் காரணமாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பகிரப்பட்டு வரும் புகைப்படம்
இந்தநிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயை ஜனாதிபதி நேரில் சென்று பார்வையிட்டு, தாயாரின் கையைப் பிடித்த வண்ணம் அமர்ந்திருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவானோரால் பகிரப்பட்டு வருகின்றது.

குறிப்பாக, கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசியல்வாதிகளின் குடும்பத்தாருக்கு, உறவினர் உள்ளிட்டவர்களுக்கு சுகயீனம் என்றாலும் கூட தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்கைகள் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.
இவ்வாறான நிலையில், ஜனாதிபதியைச் சார்ந்தவர்கள் அரச வைத்தியசாலைகளில் சேவையைப் பெற்றுக் கொள்வது குறித்து பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதேவேளை, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க எளிமையாக செயற்படுவது தொடர்பில் பாராட்டப்பட்டாலும் கூட அதே சமயம் விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஜனாதிபதியின் இவ்வாறான செயற்பாடுகள் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அண்மையில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri