ஹோட்டலில் ஏற்பட்ட குழப்பம் - துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட அதிகாரி
களுத்துறை சுற்றுலா ஹோட்டலில் பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் வெளிநபர்கள் கொண்ட குழுவிற்கும் இடையில் ஏற்பட்ட மோதலை கட்டுப்படுத்த ஹோட்டலின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்குள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றுலா ஹோட்டலுக்கு முன்பாக உள்ள கடற்கரையில் இளைஞர்கள் குழுவொன்று மது அருந்தி வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதுடன், விடுதியின் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மோதலை ஏற்படுத்த முயற்சித்துள்ளனர்.
ஹோட்டலில் குழப்பம்
பாதுகாவலர் ஒருவர் தாக்கப்பட்டதாகவும், அதைக் கட்டுப்படுத்த சம்பவ இடத்தில் தங்கியிருந்த ஹோட்டலின் உயர் நிர்வாக அதிகாரி, பதிவு செய்யப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, அப்போது இளைஞர்கள் தப்பியோடிவிட்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விண்வெளியில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைக்கும் தமிழர் - விண்ணுக்கு புறப்பட்ட PSLV C62 News Lankasri
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri