பயங்கரவாத வன்முறைகள் நாட்டில் மீண்டும் எப்போதும் இடம்பெறாது! - ஜனாதிபதி

Covid New York Gotapaya United Nation
By Dhayani Sep 22, 2021 04:24 PM GMT
Report

பயங்கரவாத வன்முறைச் சம்பவங்கள் நாட்டில் மீண்டும் எப்போதும் இடம்பெறாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ( Gotapaya Rajapaksha) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,


உலகின் அனைத்து இறைமையுடைய நாடுகளுக்கும் அவற்றின் அளவு அல்லது பலத்தை கருத்திற்கொள்ளாது நியாயமான அடிப்படையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

இலங்கையில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்க இடமில்லை. சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்வது அவசியமானது.

கோவிட் பெருந்தொற்று கட்டுப்பாட்டில் இலங்கை ஆக்கபூர்வமான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், கோவிட் தொற்று ஒழிப்பில் கற்றுக் கொண்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் பிராந்திய வலயத்தின் மத்திய நிலையமாக இலங்கையை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

அபிவிருத்தி அடைவந்து வரும் நாடுகள் பொருளாதார நிச்சயமற்றத்தன்மைகளிலிருந்து மீள்வதற்கு சர்வதேச பொறிமுறைமையொன்று அவசியம்.

நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் முனைப்புக்களுக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இன,மத, ஆண், பெண் என்ற எந்தவிதமான பேதங்களையும் பாராட்டாது அனைத்து இலங்கையர்களுக்கும் சுபீட்சமான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதே அரசாங்கத்தின் இலக்கு எனவும், அதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பேண்தகுதன்மை என்பது இலங்கை அபிவிருத்தி கட்டமைப்பின் பிரதான அங்கமாகும். காபன் வெளியீட்டை அவசரமாக குறைக்க வேண்டியதன் தேவையை இலங்கை புரிந்து கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

புத்த பெருமானின் போதனைகளுக்கு அமைய இயற்கையை பாதுகாப்பதன் பொறுப்பு எவ்வளவு முக்கியத்துமானது என்ற தெளிவு இலங்கைக்கு உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நாடாளுமன்றம், நீதிமன்றம் மற்றும் அதன் சுயாதீன நிறுவனங்கள் என்பன தங்களது கடமைகளையும், பொறுப்புக்களையும் நிறைவேற்றுவதற்கு எல்லை கடந்த அவகாசம் இருக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அனைத்து மக்களின் நலன்களுக்காகவும் சட்டம், நிர்வாகம், கல்வி உள்ளிட்ட துறைகளை மறுசீரமைப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நீடித்து நிலைக்கும் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உள்நாட்டு ரீதியான பொறுப்புகூறல் முறைமையொன்றும், அர்த்தபுஷ்டியான நல்லிணக்கமும் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடரில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotapaya Rajapaksha) விசேட உரையொன்றினை ஆற்றியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பமானது.

கோவிட்19 வைரஸ் தொற்றிலிருந்து நம்பிக்கையான மீட்பு, நிலைத்தன்மையை உருவாக்குதல், மனித உரிமைகளுக்கு மதிப்பளித்தல் உள்ளிட்ட விடயங்களை மையமாக கொண்டு குறித்த கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US