சிறைச்சாலை அதிகாரியின் வீட்டின் முன்னால் வைக்கப்பட்ட மலர்வளையம்
காலி சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் வீட்டிற்கு முன்னால் மலர் வடம் மற்றும் மெழுகுவர்த்தி ஒன்றை வைத்துச் சென்றுள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் இன்று (18) காலை பதிவாகியுள்ளதாக சிறைச்சாலை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த சிறைச்சாலை அதிகாரி காலி சிறைச்சாலையின் ஒழுக்காற்றுப் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கை
காலி சிறைச்சாலைக்கு வெளியே இருந்த வீசப்படும் பொதிகளில் இருந்து 13 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புகையிலையை குறித்த அதிகாரி கண்டுபிடித்துள்ளதாகவும், நேற்று மாலையும் வெளியில் இருந்து வீசப்பட்ட பொதி ஒன்றை இந்த அதிகாரி கண்டு பிடித்துள்ளார்.
இதன்போது, கைதி ஒருவர் அதிகாரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அது தொடர்பில் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த அதிகாரியின் பாதுகாப்பு தொடர்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri
