E.T.I நிறுவனத்தின் பணிப்பாளர்கள் நால்வருக்கு விளக்கமறியல்
ஈ.டி.ஐ நிறுவனத்தின் பணிப்பாளர்கள் நால்வரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈ.டி.ஐ நிறுவனத்தின் பணிப்பாளர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
இதனையடுத்து ஈ.டி.ஐ நிறுவனத்தின் பணிப்பாளர்களான நாலக எதிரிசிங்க, ஜீவக எதிரிசிங்க, அஞ்சலி எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.
13.7 மில்லியன் ரூபாய் வைப்பு பணத்தை சட்டவிரோதமாக ஏற்றுக்கொண்டமை, முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் பணமோசடி ஆகிய குற்றச்சாட்டுகளுக்கு அமைவாகவே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.