பிரேமதாசவின் படுகொலையை பட்டாசு கொளுத்தி கொண்டாடிய மக்கள்! பாரிய விளைவு குறித்து எச்சரிக்கை
தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டவர்களாக தங்களைக் காட்டிக் கொண்டு, எம்மை இனவாதிகளாக சித்தரிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தான் 1983ஆம் ஆண்டு ஜுலை காலப்பகுதியில் தமிழ் மக்களை படுகொலை செய்து அந்த பழியை மக்கள் மீது சுமத்தியது என 43ஆவது படையணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆத்திரம் வெளியிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டில் இனவாத முரண்பாட்டையும், ஆயுத போராட்டத்தையும் ஐக்கிய தேசியக் கட்சியே தோற்றுவித்தது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதை நாட்டு மக்கள் பட்டாசு கொளுத்தி கொண்டாடியதை ஜனாதிபதி ரணிலும் நன்கறிவார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஜனநாயக போராட்டத்தை சர்வாதிகாரமாக அடக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நடவடிக்கைகள் நாட்டில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan