கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்த பிரதேச சபையின் உப தலைவர் மரணம்
வவுனியா தமிழ் பிரதேச சபையின் உப தலைவர் கோவிட் தொற்றுக்குள்ளான குணமடைந்து வீடு திம்பிய பின்னர் உயிரிழந்துள்ளதாக வவுனியா பொது சுகாதார பரிசோதகர் அலுவலகம் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட்டு தெரிவான உப தலைவரான 52 வயதுடைய வெல்லசாமி மகேந்திரன் கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி கோவிட் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டார்.
வைத்தியசாலை சிகிச்சையின் போது கோவிட் தொற்று குணமடைந்தமையினால் அவர் வீடு திரும்பியுள்ளார்.
பின்னர் உப தலைவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
பிரதேச பரிசோதனையின் பின்னர் அவரது சடலத்தை குடும்பத்தினரிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிடப்படுகின்றது.