மின்தடை குறித்து வவுனியா மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு
உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை (07) ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை வவுனியா மாவட்டத்தில் சில பிரதேசங்களில் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியா பிரதேசத்தில் குருக்களூர், மன்னார் வீதி, கூமாங்குளம் கிருஷ்ணா
மெடிகிளினிக், சாந்தசோலை, பூ ஓயா, ஈரப்பெரியகுளம் இராணுவ முகாம், கவுலும்
ஆடைத்தொழிற்சாலை, குருந்துபிட்டிய தேசிய இளைஞர் பயிற்சி முகாம், அழகல்ல (தீரு
வேகம) அளுத்கம, ஈரப் பெரியகுளம் பொலிஸ் நிலையத்தடி, ஈரப்பெரியகுளம்,
கல்குண்டாமடு, மூன்றுமுறிப்பு நவகம், பகல அளுத்வத்த, புபுது கம, வேரகம,
குட்செட்வீதி, பண்டாரிக்குளம், சேவாலங்கா தவசிக்குளம், சிவன் கோவிலடி
தோணிக்கல், தவசிக்குளம் பிள்ளையார் வீதியடி, தவசிக்குளம், தோணிக்கல் - லக்ஸபான
வீதி, நீர்வழங்கல் (மதவுவைத்த குளம்) குளோப் அரிசி ஆலை ஆகிய பிரதேசங்களிலும்
மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.