தீபாவளி தினத்திற்கான மின்வெட்டு தொடர்பில் வெளியான அறிவிப்பு
தீபாவளி தினத்திற்கான மின்வெட்டு தொடர்பான அறிவிப்பை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் மூன்று தினங்களுக்கான மின்வெட்டு அறிவித்தலை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் நேற்று மாலை அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தீபாவளி தினத்தன்றும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுமா என்பது குறித்து பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தகவல் வெளியிட்டுள்ளார்.
தீபாவளி தினத்தன்று மின்வெட்டு

தீபாவளி தினத்தன்றும் மின்தடையை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் தாம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாகவும், பெரும்பாலும் தீபாவளி தினத்தன்று மின்சாரம் துண்டிக்கப்படமாட்டாது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் திங்கட்கிழமை (24) மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மேலும் தீபாவளி தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஐரோப்பா கேட்டுக்கொண்டால்... ஈரான் போர் மத்தியில் விளாடிமிர் புடின் சொன்ன அந்த வார்த்தை News Lankasri
இறுகும் ஈரான் போர்... மத்திய கிழக்கில் Doomsday அணுசக்தி விமானங்களை களமிறக்கிய ட்ரம்ப் News Lankasri