உடனடியாக முடிவுக்கு கொண்டுவரபடவுள்ள அதிவேக வீதி!
பொத்துஹர ரம்புக்கன பிரிவை 2026ம் ஆண்டின் இறுதிக்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகம் மற்றும் சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் டாக்டர் பிரசன்ன குணசேன ஆகியோர் இதனை தெரிவித்துள்ளனர்.
நடவடிக்கை
விரைவாக நிர்மாணிக்கும் பொத்துஹெர-ரம்புக்கன நெடுஞ்சாலையின் அபிவிருத்தி பணிகளை கண்காணிப்பதற்காக இரு அமைச்சர்களும் கள விஜயமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை இந்த அபிவிருத்தி வேலைத்திட்டத்தினால் உள்ளூர் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்குமாறு நிர்மாண நிறுவனங்களுக்கும் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கும் (RDA) அறிவுறுத்தியுள்ளனர்.
