கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய யோசனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்க ஐவர் அடங்கிய குழு
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைய யோசனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை பரிசீலிக்க உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்களை கொண்ட குழு நேற்று நியமிக்கப்பட்டது.
ஐந்து நீதியரசர்களைக் கொண்ட இந்த குழுவில் பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூூர்ய மற்றும் நீதிபதிகள் புவனேகா அலுவிஹரே, பிரியந்த ஜெயவர்தன, முர்டு பெர்னாண்டோ மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்குவர்.
இந்த மனுக்களை ஐக்கிய தேசியக்கட்சியின தவிசாளர் வஜிர அபேவர்தன, அதன் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர்- கபில ரேணுக பெரேரா, கொள்கை மாற்று மையத்தின் நிர்வாக இயக்குநர் பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தா சமரசிங்க ஆகியோர் தாக்கல் செய்துள்ளனர் .
அதேநேரம் இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனமும், கொழும்பு துறைமுக நகர பொருளாதார
ஆணைக்குழு யோசனையை எதிர்த்து ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முடிவுக்கு வரும் சக்திவேல் சீரியல், திங்கள் முதல் மாறப்போகும் விஜய் சீரியல்களின் நேரம்... முழு விவரம் இதோ Cineulagam
உக்ரைன் வான் பரப்பிற்குள் பட்டப்பகலில் நுழைந்த 400 ட்ரோன்கள்: புதிய உத்தியை கையில் எடுக்கும் ரஷ்யா News Lankasri
திருட்டு விஷயம் தெரிந்ததும் வானதி சொன்ன விஷயம், நிலா சோழனுக்கு சொன்ன சந்தோஷ செய்தி... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கார்க் தீவுக்கு குறி! முக்கிய வான்வழி படைத் தளபதிகள் மத்திய கிழக்கிற்கு அனுப்பும் அமெரிக்கா News Lankasri