கடலில் ஒரு நகரம் பிரம்மிக்க வைக்கும் கொழும்புத் துறைமுக நகரம்
இலங்கையின் தலைநகர் கொழும்பானது சர்வதேச அளவில் பெயர்பெற்று வரும் நவீன நகரமாக துரிதமாக மாற்றமடைந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது.
இந்த நகரை மேலும் அலங்கரிக்கும் விதமாக அனைத்து வசதிகளையும் உள்ளடக்கி நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத் தொகுதிகளைக் கொண்டது தான் கொழும்புத் துறைமுக நகரமாகும்.
இலங்கையின் மேற்குபுறத்தில் அமைந்திருக்கும் கொழும்பு துறைமுகத்தின் தென்பகுதியில் மணல் கொண்டு கடலை நிரப்பி புதிய நிலப்பகுதியை உருவாக்கியே இந்நகர் உருவாக்கப்படுகின்றது.
இத்திட்டத்தின் மூலம் சமூக அபிவிருத்தியை ஊக்குவித்து, உள்நாட்டில் வாழ்வாதாரம் சார்ந்த தேவைகள் மற்றும் மேம்பாட்டை கண்காணித்து உள்நாட்டு சமூகத்திற்கு கண்கூடான நன்மைகளை வழங்குவதே கொழும்பு துறைமுக நகரத்தின் நோக்கமாகும். இந்நகரம் தொடர்பான மேலதிக தகவல்களை காணொளியில் காணலாம்.