மாணவர்களுக்கு பாலுக்கு பதிலாக கஞ்சி?
பாடசாலை மாணவர்களுக்கு சத்துணவாக வழங்கப்படும் பாலுக்கு பதிலாக கஞ்சி வழங்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை மாணவர்களுக்கு பால் வழங்குவதற்கு பதிலாக உள்நாட்டு அரிசியினால் தயாரிக்கப்படும் ஒரு கோப்பை கஞ்சியை வழங்குவதற்கு கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன (Dinesh Gunawardena) யோசனை ஒன்றை அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.
நாட்டில் தெரிவு செய்யப்பட்ட 923 பாடசாலைகளில் சத்துணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையிலான மாணவர்களுக்கு இவ்வாறு சத்துணவு கடந்த 2012ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சத்துணவாக வழங்கப்படும் ஒரு கிளாஸ் பாலுக்கு பதிலாக ஒரு கிளாஸ் கஞ்சி வழங்குமாறு அமைச்சர் பரிந்துரை செய்துள்ளார்.
இதற்காக ஒர் மாணவருக்காக 23 ரூபா ஒதுக்கீடு செய்ய முன்மொழியப்பட்டுள்ளது.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 18 மணி நேரம் முன்
சுந்தரி சீரியல் புகழ் நடிகை ஸ்ரீ கோபிகாவிற்கு அழகாக நடந்து முடிந்த சீமந்தம்... போட்டோஸ் இதோ Cineulagam
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது, சிங்கப்பெண்ணே சீரியல்களின் நேரம் மாற்றம்... வெளிவந்த தகவல் Cineulagam