பொன்னாலை வரதராஜப் பெருமாள் வைகுண்ட ஏகாதசி தேர்த்திருவிழா (Photos)
வரலாற்றுச் சிறப்பு மிக்க பொன்னாலை வரதராஜப் பெருமாள் வைகுண்ட ஏகாதசி தேர்த்திருவிழா நேற்றைய தினம் (24.12.2023) வெகு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
சுவர்க்கவாயில் தரிசனம் இடம்பெற்று அதைத் தொடர்ந்து வசந்தமண்டப பூசை இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து ஸ்ரீதேவி பூமிதேவி சமேத வரதராஜப் பெருமாள் தேரில் வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தேர் இருப்பிடம் வந்ததன் பின்னர் பச்சை சாத்தப்பட்ட சுவாமி ஆலயத்தினுள் சென்றுள்ளார்.
தீர்த்தத்திருவிழா
இந்த ஆலயத்தின் கொடியேற்றமானது கடந்த 15.12.2023 ஆரம்பமாகிய நிலையில், தீர்த்தத் திருவிழாவானது இன்றையதினம் இடம்பெறவுள்ளது.
குறித்த ஆலயத்தில் வருடத்தில் இரண்டு முறை தேர்த்திருவிழா இடம்பெறுகின்றமையும் சிறப்பம்சமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |