பாடசாலை அதிபரின் செயலால் கதிகலங்கிய அரசியல்வாதிகள்
இரத்தினபுரி, ஏஹெலியகொடை பாடசாலையின் அதிபர். தெஹிஓவிட்ட வலய கல்வி திணைக்களத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
6ஆம் வகுப்பில் இருந்து 13ஆம் வகுப்பு வரை பாடசாலைகளை திறப்பதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதற்காக கடந்த காலங்களில் பாடசாலைகளை திறப்பது தொடர்பில் அதிகமாக ஆர்வம் காட்டிய அரசியல்வாதிகள், பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்களை ஈடுபடுத்தி சுத்தப்படுத்துமாறு அதிபர் தனது கடிதத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கல்வி நடவடிக்கையை தவிர்த்து வேறு வெளிபுற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருப்பதற்கு ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிபர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.