எரிவாயு வெடிப்புகளால் அரசியல்வாதிகளும் அச்சத்தில் : அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
சமையல் எரிவாயு கொள்கலன்கள் உட்பட வெடிப்புச் சம்பவங்களில் பின்னணியில் சூழ்ச்சிகள் இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் என பெருந் தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Johnston Fernando) தெரிவித்துள்ளார்.
ஜா-எலயில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மக்கள் மாத்திரமல்ல, நான் உட்பட அரசியல்வாதிகளும் இதன் காரணமாக அச்சத்தில் உள்ளோம்.
நாங்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளோம். எரிவாயு புதிய விடயமல்ல., எமது வீடுகளில் இருக்கின்றது. இது முழு நாட்டுக்கும் பெரிய பிரச்சினை.
கடந்த காலங்களில் கிறீஸ் பூதங்கள் இருந்தன. இதனால், இப்படியான விடயங்களை வேறு கட்சிகளும் செயக் கூடும் எனவும் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam