தேர்தல் விகிதாசார முறையில் நடக்கும் என்ற உடன்பாடு ஒரு தற்காலிக ஏற்பாடாகும் - மனோ கணேசன்

Government Parliament Election Mano Ganesan
By Independent Writer Oct 09, 2021 11:00 AM GMT
Report

தேர்தல் விகிதாசார முறையில் நடக்கும் என்ற உடன்பாடு ஒரு தற்காலிக ஏற்பாடாகும், இப்போது பழைய முறையில் தேர்தல்கள் நடத்தப்படலாம் என்ற உடன்பாடு அரசு - எதிரணி மத்தியில் ஏற்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 

எனவே தேர்தல் முறைமை சீர்திருத்த பணிகள் தொடரும், அடுத்த தெரிவுக்குழு கூட்டம் எதிர்வரும் 22ம் திகதி நடைபெறும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தல் முறை தற்போது பேசப்படும் ஒரு தலைப்பு. மாகாணசபை தேர்தலை விகிதாசார முறையில் நடத்த இப்போது அரசு இணங்கியுள்ளது.

இப்போது தேர்தல் முறையை மாற்றப் போனால் பெரும் தாமதம் ஏற்படும். இதில் நாம் உறுதியாக இருந்தோம்.

ஆகவே, தெரிவுக்குழுவில், அரசு-எதிரணி மத்தியில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணம் அரசாங்கத்தின் மீதான உள்நாட்டு, சர்வதேச அழுத்தங்கள் ஆகும். ஆகவே இது இடைக்கால உடன்பாடுதான்.

ஆகவே தேர்தல் உள்ளூராட்சி, மாகாணசபை, நாடாளுமன்றம் ஆகியவற்றுக்கான தேர்தல் முறைமைகள் பற்றிய அவதானம் தொடர்ந்து தேவை.

“விகிதாசார முறைமை வேண்டாம்”, “தொகுதி முறையே வேண்டும்” என தெரிவுக்குழுவில் பெரும்பான்மை, குறிப்பாக அரசாங்க கட்சி அரசியல்வாதிகள் கூப்பாடு போட்டார்கள்.

அது இந்நாட்டில் சிதறி வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் நாடாளுமன்ற, மாகாணசபை பிரதிநிதித்துவங்களை அபாயத்துக்குள் தள்ளும் நோக்கத்தைக் கொண்டதால், நாம் இந்நிலைப்பாட்டை எதிர்த்தோம்.

விகிதாசார முறைமை மாற்றப்படக்கூடாது என்ற தமிழ், முஸ்லிம் கட்சிகளின் நிலைப்பாட்டுக்கு ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) உட்பட்ட பெரும்பான்மை கட்சிகளும் ஆதரவளித்தார்கள்.

அதேவேளை அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான சிறிலங்கா சுதந்திர கட்சி உட்பட்ட பல கட்சிகளின் தலைவர்களுடனும் நான் இது தொடர்பில் பேச்சுகள் நடத்தி இருந்தேன்.

அவர்களும் அரசாங்கத்துக்கு உள்ளே அழுத்தங்களைப் பிரயோகித்தார்கள். நாடாளுமன்றமும், மாகாணசபைகளும் தேசிய, மாகாண சட்ட மூலங்களை விவாதிக்கும் நிறுவனங்களாகும்.

ஆகவே இங்கே உள்ளூர் தேர்தல் தொகுதிகளைப் பிரதிநிதித்துவம் செய்யும் உறுப்பினர்களின் அவசியம் கிடையாது.

ஆனால், நீர், மின்சாரம், வீதிகள் உட்பட மக்களின் நாளாந்த விவகாரங்களைக் கையாளும் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற வட்டார உறுப்பினர்களாக இருக்கலாம். உள்ளூராட்சி மன்றங்களில், அவ்வந்த மன்றங்களின் வட்டாரங்களுக்குப் பொறுப்பு கூறக்கூடிய உறுப்பினர்களுக்கான அவசியம் இருக்கின்றது.

ஆகவே நாடாளுமன்றம் , மாகாணசபைகளுக்குத் தொகுதி முறை தேவையில்லை என நாம் கூறினோம். உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தொகுதி (வட்டார) உறுப்பினர்கள் இருக்கலாம் எனவும் நாம் கூறினோம்.

அதேபோல்தான், விருப்பு வாக்கு என்பது ஜனநாயகத்தின் உச்சக் கட்டம். கட்சிக்கு வாக்களிக்கும் ஒரு வாக்காளர், அந்த கட்சித் தலைமை முன் நிறுத்தும் வேட்பாளருக்கு மட்டும்தான் வாக்களிக்க வேண்டும் என்ற கட்டாயத்திலிருந்து, விருப்பு வாக்கு மூலம் தப்புகிறார்.

கட்சிக்கு வாக்களிக்கும் அதேவேளை தனக்குப் பிடித்த வேட்பாளரைத் தெரிவு செய்ய ஒவ்வொரு வாக்காளருக்கும் “ஜனநாயக சுதந்திரத்தை”, விருப்பு வாக்கு வழங்குகிறது. இதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

“விருப்பு வாக்கு வேண்டாம்”, “விகிதாசார முறைமை வேண்டாம்”, “தொகுதி முறைக்கு போவோம்” என்ற கோஷங்கள் பெரும்பான்மை இன பெரிய கட்சிகளின் கோஷங்கள்தான்.

அதேவேளை தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் சிலர் கூட, இவைபற்றிய தெளிவு இல்லாமல், “விருப்பு வாக்கு வேண்டாம்”, “தொகுதி முறைக்குப் போவோம்” என்ற கோஷங்களை ஆங்காங்கே எழுப்பினார்கள்.

இது முதிர்ச்சியற்ற பிழையாகும். தேர்தல் முறை விவாதம் தொடரும். இவை பற்றிய அவதானத்துடன் தமிழ், முஸ்லிம் கட்சிகள் செயற்படவேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.   

மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US