கிளப் வசந்த கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட அரசியல் பிரமுகர்
தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா(கிளப் வசந்த) உட்பட இருவரை சுட்டுக் கொன்ற சம்பவம் தொடர்பில் மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த உறுப்பினர் பாணந்துறையில்வைத்து இன்று (29.08.2024) கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவருக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் இவர், மேற்கு தெற்கு குற்றப் பிரிவினரின் விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிளப் வசந்த கொலை
கிளப் வசந்த கொலையின் பிரதான சந்தேகநபராக கருதப்படும் குற்றக் கும்பல் தலைவரான கஞ்சிபானி இம்ரானின் வேண்டுகோளுக்கு இணங்க மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 25 நாட்கள் அவரது வீட்டில் அடைக்கலம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர் 55 வயதுடையவர் எனவும், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam

உடல் உறையும் நிலையில் லொறிக்குள் சிக்கியிருந்த புலம்பெயர்ந்தோர்... சாரதியால் அம்பலமான கொடூரம் News Lankasri

ஷார்ஜாவில் தூக்கில் தொங்கி இறந்த கேரள பெண்: இந்தியா திரும்பிய கணவர் விமான நிலையத்தில் கைது News Lankasri
