புதுக்குடியிருப்பில் ஆறு இளைஞர்கள் கைது
புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குரவில் பகுதியில் ஐஸ் போதை பொருளை பயன்படுத்த தயாராக இருந்த இளைஞர்கள் அறுவரை கைது செய்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (27.08.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
மக்களுக்கான சேவைகளை இலகுவில் பெறக்கூடியவாறு நகரத் திட்டமிடல்கள் அமைய வேண்டும் : வடக்கு ஆளுநர் தெரிவிப்பு..!
மேலதிக விசாரணை
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குரவில் பகுதியிலுள்ள யாருமற்ற வீடொன்றில் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாக புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.
இந்நிலையில், திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையினை மேற்கொண்ட புதுக்குடியிருப்பு பொலிஸ் குழுவினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது குறித்த இளைஞர்களிடமிருந்து 7 தொலைபேசிகளும், பதினேழாயிரம் ரூபா பணம் என்பவற்றுடன் சிறு சிறு 7 பொதிகளில் 90மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் உடையார்கட்டு குரவில் பகுதியினை சேர்ந்த நால்வர் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்த இருவர் ஆகிய இளைஞர்கள் ஆவார்.

குறித்த இளைஞர்களிடம் மேற்கொள்ளப்பட்டுவரும் மேலதிக விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam