மஹிந்த தலைமையில் கூடிய 'மொட்டு'வின் அரசியல் குழு
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் நேற்று (06.03.2026) பிற்பகல் நடைபெற்றது.
பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது.
இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் சிரேஷ்ட பேராசிரியர் வணக்கத்துக்குரிய உதுராவல தம்மரதன தேரர், கட்சியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, கட்சியின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் மற்றும் தேசிய ஒருங்கிணைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
பங்கேற்றோர்
மேலும், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர்.
எதிர்வரும் தேர்தல் நடவடிக்கைகள், கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri