போதைக்கு அடிமையானவர்களுக்காக புதிதாக திறக்கப்படும் புனர்வாழ்வு நிலையங்கள்
போதைக்கு அடிமையான 10,000 பேருக்கு ஒரே நேரத்தில் புனர்வாழ்வு அளிக்கும் நோக்கில் 250 புனர்வாழ்வு நிலையங்களை இம்மாதம் திறக்க பொலிஸ் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
மகா சங்கத்தினர் மற்றும் கத்தோலிக்க, இஸ்லாமிய, இந்து மத குருமார்களின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் போதைப்பொருளுக்கு அடிமையான 50 பேரை ஒரு மையத்தில் தங்க வைக்கும் மையங்கள் நிறுவப்படும்.
போதைப்பொருளுக்கு அடிமையான இளைஞர்கள் போதைப்பொருளில் இருந்து மீள்வதே புதிய வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் என கண்டியில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போது தெரிவித்துள்ளார்.

100,000 பேர் போதைக்கு அடிமை
நாட்டில் 100,000 பேர் அனைத்து விதமான போதைப் பொருட்களுக்கும் அடிமையாகி உள்ளதாகவும், ஆனால் வருடாந்தம் 4700 பேர் புனர்வாழ்வளிக்கப்படுவதாகத் தெரிவித்த பொலிஸ் மா அதிபர், அது நியாயமானதல்ல என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் கந்தகாடு மையத்தில் நடந்ததைப் போன்று முகாம்களில் புனர்வாழ்வளிக்கப்பட்டதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரான் போர்.. துபாயில் சிக்கி தவிக்கும் இந்திய நடிகைகள்! பிரதமர் மோடிக்கு உருக்கமான வேண்டுகோள் Cineulagam
ஈரான் உச்ச தலைவர் அலி காமெனி குடும்பத்துடன் கொல்லப்பட்டார்: ஈரான் அரசு ஊடகம் அறிவிப்பு News Lankasri
விஜய்க்கு பொண்டாட்டியா கூட இருப்போம்... ரசிகையின் பரபரப்பு பேச்சால் அதிர்ச்சியில் ரசிகர்கள்! Manithan
இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல்... ஈரானின் அதிரடி முடிவால் ஸ்தம்பித்த எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி News Lankasri