சார்ஜன்ட் ஹனீபா விடயத்தில் நீதியினை நிலைநாட்டுங்கள்: ரிஷாட் பதியுதீன் கோரிக்கை

Risad Badhiutheen Tiran Alles Sri Lanka Police Investigation
By Ashik Oct 05, 2023 03:59 PM GMT
Report

பொலிஸார், மீது பொதுமக்கள் கொண்டுள்ள சந்தேகங்களுக்கு மத்தியில், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் சிறுபான்மை பொலிஸ் அதிகாரிகளுக்கு இழைக்கப்படும் கொடூரங்கள் நிறுத்தப்படல் வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை, வெலிகந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஏறாவூரைச் சேர்ந்த பொலிஸ் சார்ஜன்ட் முஹம்மது மக்பூல் ஹனீபா கொலைசெய்யப்பட்டமை தொடர்பில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் சீ.டி.விக்ரமரத்ன ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.

நீதிபதி சரவணராஜாவின் முடிவு சரி! சலசலப்பை ஏற்படுத்திய பெரும் சிக்கல்(Video)

நீதிபதி சரவணராஜாவின் முடிவு சரி! சலசலப்பை ஏற்படுத்திய பெரும் சிக்கல்(Video)

பாதுகாப்பு அமைச்சரிடம் வேண்டுகோள்

பொலிஸ் விடுதியில் இரத்தம் தோய்ந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் எமது கட்சியின் உயர்பீட உறுப்பினருமான எம்.எஸ்.சுபைர் தன்னிடம் முன்வைத்த வேண்டுகோள் தொடர்பில், தங்களது கவனத்தை செலுத்துமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்படுள்ளதாவது,

சார்ஜன்ட் ஹனீபா விடயத்தில் நீதியினை நிலைநாட்டுங்கள்: ரிஷாட் பதியுதீன் கோரிக்கை | Police Sergeant Killed In Polonnaruwa Welikanda

“கடமை செய்யும் தமது பொலிஸ் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள பொலிஸாரின் விடுதியில் வைத்து இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெற்றுள்ளமையானது, நீதியினை நிலைநாட்டும் பொலிஸாருக்கே இந்த நிலையா? எனக் கேட்கத் தோன்றுகின்றது.

நாட்டின் தற்போதைய நிலையில், பொலிஸார் மீது பொதுமக்கள் கொண்டுள்ள சந்தேகங்களுக்கு மத்தியில், விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கும் சிறுபான்மை பொலிஸ் அதிகாரிகளுக்கு இழைக்கப்படும் இவ்வாறான கொடூரங்கள் நிறுத்தப்படல் வேண்டும் என்பது மட்டுமல்லாது, இப்படிப்பட்ட ஈனச்செயல்களை செய்பவர்கள் எவராக இருந்தாலும் தராதரம் பாராது சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவது, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகிய தங்களது கடமையாகும்.” குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.பல்கலை மருத்துவ பீட மாணவியை காணவில்லை: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

யாழ்.பல்கலை மருத்துவ பீட மாணவியை காணவில்லை: பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

மிலேச்சத்தனமான கொடூரங்கள்

அதேவேளை, வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி இந்த மரணம் தொடர்பில் கொடுத்துள்ள அறிக்கையானது, கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்டுள்ளமை தொடர்பில் குறிப்பிட்டுள்ளதால், இது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் இவ்வாறான சம்பவங்களின் பின்னணியில் இருக்கும் திட்டம் தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அவர் இந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சார்ஜன்ட் ஹனீபா விடயத்தில் நீதியினை நிலைநாட்டுங்கள்: ரிஷாட் பதியுதீன் கோரிக்கை | Police Sergeant Killed In Polonnaruwa Welikanda

மர்ஹூம் மக்பூல் முஹம்மத் ஹனீபா மிகவும் நேர்மையான ஒரு அதிகாரி என்றும் ஊழல், மோசடிகளை வன்மையாக எதிர்க்கும் மனப்பக்குவத்தை கொண்ட ஒருவராகவும் காணப்பட்டதாக பிரதேச மக்கள் சான்றுபகர்ந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், மக்பூல் ஹனீபா பொலிஸ் நிலையத்தின் அவசர அழைப்பு பிரிவான 119க்கு பொறுப்பாக செயற்பட்டு வந்துள்ளதாகவும் இதனை கவனத்தில்கொள்ளுமாறும் தமது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சிறுபான்மைச் சமூகத்தினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இவ்வாறான மிலேச்சத்தனமான கொடூரங்கள், இனியும் இடம்பெறாதவாறு சட்ட நடவடிக்கையெடுக்குமாறும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பநிலையினை கவனத்திற்கொண்டு, அவர்களுக்கான நீதியினை உறுதிப்படுத்துமாறும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் பொதுமக்கள் பாதுகாப்பு அடைச்சிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கின் முக்கிய சாட்சி மர்மமான முறையில் மரணம்!

ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கின் முக்கிய சாட்சி மர்மமான முறையில் மரணம்!

நீதி இல்லாத இலங்கைக்கு நிதி எதற்கு..! ஜெனிவா அமர்வில் கஜேந்திரகுமார் கேள்வி

நீதி இல்லாத இலங்கைக்கு நிதி எதற்கு..! ஜெனிவா அமர்வில் கஜேந்திரகுமார் கேள்வி

மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

புத்தூர் மேற்கு, Toronto, Canada

09 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், கொட்டடி, கனடா, Canada

29 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

10 Apr, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US