நீதிமன்ற வளாகத்தில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜண்ட் கைது
ஹட்டன் (Hatton) நீதிமன்ற வளாகத்தில் வைத்து இருபதினாயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (11) ஹட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
புதையல் தோண்டிய சம்பவம் தொடர்பான வழக்கொன்றின் பிரதிவாதிகளிடம் இருந்து இருபதினாயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விளக்கமறியல்
நீதிமன்ற வளாகத்தில் உள்ள மலசல கூடத்திற்குள் வைத்து அவர் இலஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்ட நிலையில், அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பொலிஸார் உடனடியாக குறித்த பொலிஸ் அதிகாரியை கைது செய்துள்ளனர்.
அதன் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
