நீதிமன்ற வளாகத்தில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜண்ட் கைது
ஹட்டன் (Hatton) நீதிமன்ற வளாகத்தில் வைத்து இருபதினாயிரம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் (11) ஹட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
புதையல் தோண்டிய சம்பவம் தொடர்பான வழக்கொன்றின் பிரதிவாதிகளிடம் இருந்து இருபதினாயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விளக்கமறியல்
நீதிமன்ற வளாகத்தில் உள்ள மலசல கூடத்திற்குள் வைத்து அவர் இலஞ்சப் பணத்தை பெற்றுக் கொண்ட நிலையில், அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு பொலிஸார் உடனடியாக குறித்த பொலிஸ் அதிகாரியை கைது செய்துள்ளனர்.

அதன் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும்: போர் இறுதிக் கட்டத்தை எட்டி விட்டதாக டிரம்ப் அறிவிப்பு News Lankasri
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam