கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதான யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர்
விமானப் பணிப்பெண்கள் மற்றும் பயணிகளிடம் அத்துமீறிய நபரொருவர் விமான நிலையப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் மும்பை விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை தந்த விமானமொன்றில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் யாழ்ப்பாணம் நாகதீபத்தை வசிப்பிடமாகக் கொண்ட 65 வயதான ஒருவர் என்று தெரியவந்துள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
குறித்த சந்தேகநபர் அதிக போதையில் பயணிகளிடம் அத்துமீறி நடந்து கொண்டதுன், விமானப் பணிப்பெண்களிடமும் தவறாக நடந்துள்ளார்.

இதனையடுத்து விமானம் தரையிறக்கப்பட்டதும் விமான நிலையப் பொலிஸார் குறித்த சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர்.
இன்றைய தினம் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இடத்தை கண்டுபிடித்த போலீஸ்.. பதறிய குணசேகரன் செய்த விஷயம்! எதிர்நீச்சல் தொடர்கிறது இன்றைய ப்ரோமோ Cineulagam
தேநீர் கடை மீது வான்வழி தாக்குதல் - கால்பந்து போட்டியை பார்த்துக்கொண்டிருந்த 18 பேர் உயிரிழப்பு News Lankasri
3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் - முதல் முறையாக மெகா நிலநடுக்க எச்சரிக்கை விடுத்த ஜப்பான் News Lankasri