பொது மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்! - 25 இலட்சம் ரூபா சன்மானம் அறிவிப்பு
முல்லேரியா பொலிஸ் பிரிவில் மீகஹாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை கண்டு பிடிப்பதற்கு பொலிஸ் தலைமையகம் பொது மக்களின் உதவியைக் கோரியுள்ளது.
இதன்படி, தகவல் தெரிந்தவர்கள் 071-8591727 , 077-7370360 மற்றும் 071-8592279 என்ற இலக்கங்களுக்கு தகவல் வழங்க முடியும் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முல்லேரியா பொலிஸ் பிரிவில் மீகஹாவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு , பிரிதொரு நபர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று காலை 6 மணியளவில் இடம்பெற்றிருந்தது.
துப்பாக்கிச்சூட்டினை நடத்துவதற்கு வந்த சந்தேகநபர்கள் முழுமையாக முகக்கவசத்தை அணிந்திருந்ததோடு, மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்கு தேவையான தகவல்களை வழங்குபவர்களுக்கு 25 இலட்சம் ரூபா சன்மானத்தினை வழங்குவதற்கு பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. அத்தோடு வழங்கப்படும் தகவல் குறித்த இரகசிய தன்மை பேணப்படும்.
இவ்வாறு தேடப்படும் சந்தேகநபருடைய பெயர் பொன்னம்பெரும ஆராச்சிகே தொன் தனுஷ் புத்திக என்பதுடன், சந்தேகநபர் 30 வயதுடையவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை இலக்கம் 911854481v என்பதாகும்.
இல 42/02, பாரொன் திலகாந்த மாவத்தை, முல்லேரியா மற்றும் இல 333 சீ , ரொபட் குணவர்தன மாவத்தை, மாலம்பே. (மனைவியின் முகவரி) மற்றும் இல 252 , உடுமுல்ல , முல்லேரியா என்பன இவர் தங்கியிருந்த முகவரிகளாகும்.
அங்கொடை, ஹிட்புட்டான, முல்லேரியா, வெலிகம, மிதிகம, ஹிக்கடுவை மற்றும் காலி ஆகிய பிரதேசங்களிலேயே குறித்த சந்தேகநபர் அதிகளவில் நடமாடுவார்.
சம்பவ தினத்தன்று WP XV 5432 என்ற இலக்க தகடுடைய மோட்டார் சைக்கிளிலேயே சந்தேகநபர் வருகை தந்துள்ளார். இந்நிலையில், சந்தேகநபர் குறித்து தகவல்களை வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.