15 வயதான சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பலரை தேடி பொலிஸார் வலைவீச்சு!
15 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பலரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
15 வயதான சிறுமியை பாலியல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக தெரிவித்து 35 வயதான நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் கடந்த 3 மாதங்களில் சிறுமியை பல நபர்களுக்கு விற்றதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிறுமியை மூன்றாம் தரப்பினருக்கு விற்பனை செய்ய சந்தேக நபர் சமூக ஊடகங்களில் பல்வேறு விளம்பரங்களை வெளியிட்டிருந்தது தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
கொழும்பு - கல்கிசை பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இந்த மோசடி நடந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் தெல்கொட பகுதியில் வசிக்கும் தாயிடமிருந்து சிறுமியை அழைத்துச் சென்றதாகவும், இது குறித்து அந்தப் பெண் அளித்த அறிக்கையையும் பொலிஸார் பதிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்துள்ளார்.

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri

ஏர் இந்தியா விமான விபத்து: மகிழ்ச்சியையும் சோகத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் ஒரு குடும்பம் News Lankasri

ஏர் இந்தியா துயர சம்பவம்... ஒரு வாரத்திற்கு முன்பே விமான விபத்தை கணித்த இந்திய ஜோதிடர் News Lankasri

படிப்புன்னு வந்துட்டா இந்த ராசியினர் யாராலும் வெல்ல முடியாது... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
