தனியார் வகுப்பு ஆசிரியை ஏற்பாடு செய்த பொலிஸ் பாதுகாப்பு பேரணி

Sri Lanka Police Sri Lanka Police Investigation Buddhika Manatunga
By Amal Apr 19, 2025 03:25 PM GMT
Report

சமூக ஊடகங்களில் அதிகமாக பகிரப்பட்டு வரும் காணொளி குறித்து இலங்கை பொலிஸ் விசாரணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அதில், தனியார் வகுப்புக்களை நடத்தும் ஆசிரியை ஒருவர், 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக பொலிஸ் பாதுகாப்பு பேரணி ஒன்றை நடத்தியுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

பிள்ளையான் - சுரேஷ் சலேவுக்கு கிடுக்குப்பிடி! கட்டுநாயக்கவில் விசேட அதிரடி நடவடிக்கை

பிள்ளையான் - சுரேஷ் சலேவுக்கு கிடுக்குப்பிடி! கட்டுநாயக்கவில் விசேட அதிரடி நடவடிக்கை

புலனாய்வு மதிப்பாய்வு

பொதுவாக திரைப்படம் எடுப்பது போன்ற குறிப்பிட்ட பொது விடயங்களுக்கு, கோரிக்கை மற்றும் அதன் சூழல், கதை வசனம் உட்பட முழுமையான புலனாய்வு மதிப்பாய்வுக்குப் பின்னரே, இலங்கை பொலிஸ் அதிகாரிகளையும் வாகனங்களையும் வழங்குவது வழக்கமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் வகுப்பு ஆசிரியை ஏற்பாடு செய்த பொலிஸ் பாதுகாப்பு பேரணி | Police Safety Rally Organize Private Class Teacher

அத்துடன், இசை நிகழ்ச்சிகள் அல்லது அனுமதிச்சீட்டுக்களின் அடிப்படையில் நடைபெறும் விழாக்கள் போன்ற பொது நிகழ்வுகளுக்கும் பொலிஸ் அதிகாரிகள் பணியமர்த்தப்படலாம், எனினும் தேவையான கட்டணம் செலுத்தினால் மட்டுமே, அந்த விடயங்கள் அனுமதிக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் 5 ஆம் வகுப்பு புலமைப்பரிசில் தேர்வில் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழாவுக்கு, இந்த அணிவகுப்பு தேவை என்று கூறியே, குறித்த ஆசிரியை, பொலிஸாரின் ஆதரவைக் கோரியதாகக் கூறப்படுகிறது.

ஹட்டனில் இடம்பெற்ற விபத்து! 3 பேர் படுகாயம்

ஹட்டனில் இடம்பெற்ற விபத்து! 3 பேர் படுகாயம்

 முதற்கட்ட விசாரணை

அத்துடன் இந்த நிகழ்வில் கிட்டத்தட்ட 8,000 மாணவர்களும் 35,000 பெற்றோர்களும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

தனியார் வகுப்பு ஆசிரியை ஏற்பாடு செய்த பொலிஸ் பாதுகாப்பு பேரணி | Police Safety Rally Organize Private Class Teacher

இருப்பினும், முதற்கட்ட விசாரணைகளில், ஆசிரியை தனது தனிப்பட்ட பிம்பத்தை உயர்த்திக் கொள்ள பொலிஸாரின் உதவியைப் பயன்படுத்தியிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது, எனவே இது அரச வளங்களை தவறாகப் பயன்படுத்துவது குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த நிகழ்வுக்காக, வாகனங்கள் மற்றும் அதிகாரிகள் எவ்வாறு ஒதுக்கப்பட்டனர், மேலும் உத்தியோகபூர்வ வளங்களை அங்கீகரிக்கப்படாத முறையில் பயன்படுத்துவதில் பொலிஸார் உடந்தையாக இருந்தார்களா என்பது குறித்து இலங்கை பொலிஸ் விசாரணையை நடத்தி வருகிறது என்றும் பொலிஸ் பேச்சாளர் மனதுங்க கூறியுள்ளார்.

இதற்கிடையில் இந்த சம்பவம் எந்த இடத்தில் இடம்பெற்றது என்ற விடயம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொரிய மொழிப் பரீட்சைக்கான திகதிகளில் மாற்றம்

கொரிய மொழிப் பரீட்சைக்கான திகதிகளில் மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US