திருட்டு சம்பவத்துடன் தொடர்புடை நால்வர் கைது
புதுக்குடியிருப்பு - பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு பகுயில் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர்கள் நால்வரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் இன்று தெரிவித்தனர்.
விசுவமடுப்பகுதி வாழ் மக்களின் வீடுகளில் அன்மைய நாட்களாக பெறுமதியான பொருட்கள் திருடப்படும் சம்பவம் அதிகரித்திருந்தது.
இந்த நிலையில் நேற்று அதிகாலை திருட்டு சம்பவத்தில் தொடர்பு பட்டதாக சந்தேகிக்கப்படும் நால்வரை அப்பகுதி மக்கள் நையப்புடைத்து பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் விசுவமடுப்பகுதி குமாரசாமிபுரம், வள்ளுவர்புரம், மாணிக்கபுரம், இளங்கோபுரம் பகுதியினை சேர்ந்த நால்வரையே புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தானர்.