பெண்களுக்கு எதிரான பொலிஸாரின் நடவடிக்கை: தேசபந்து தென்னகோன் உத்தரவு
பெண்கள் மீது தவறான புரிதலோடு செயற்படும் பொலிஸ் அதிகாரிகள் தொடர்பில் கண்டறிந்து அவர்களின் பொறுப்புகள் பறிக்கப்படவுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து(Deshabandu Tennakoon) தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் புலனாய்வுக்குழுக்களின் அறிக்கையைப் பெற்றுக் கொள்ளுமாறும், அதனை பொலிஸ் ஆணைக்குழுவில் சமர்ப்பித்து ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர் பணிப்புரைவிடுத்துள்ளார்.
பெண்களுடன் முறைதவறிய உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் குறித்து முதற்கட்ட புலனாய்வு அறிக்கை பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.
தேசபந்து தென்னகோன் உத்தரவு
அவ்வாறானவர்கள் அடையாளம் காணப்பட்டவுடன் குறித்த அதிகாரிகள் பொறுப்பதிகாரி பதவியில் இருந்து விலக்கப்படவுள்ளனர்.
மேலும், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் தங்களின் கீழ் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடுகளை மேற்கொள்ள வரும் பெண்களை, அதிகாரத்தைக் காட்டி ஏமாற்றி தவறான உறவை ஏற்படுத்திக் கொள்வதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் சிலர் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதற்கமைய அவ்வாறான பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் குறித்து மாத்திரமன்றி, கனிஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் புலனாய்வு அறிக்கையொன்றைப் பெறுமாறு பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
|





உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

சன் டிவியில் ஒளிபரப்பாகும் 2 ஹிட் சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam

விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

ரவி மோகன் பேசியதை கேட்டு கெனிஷா கண்ணீர்.. சொத்துக்கள் முடக்கம், பிரச்சனைகள் பற்றி எமோஷ்னல் Cineulagam

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
