உயிரை பணயம் வைத்து சிறுமியை காப்பாற்றிய பொலிஸ் அதிகாரிகள்! தாய் வெளியிட்ட தகவல்
பாணந்துறை கடற்கரைக்கு வந்த சிறுமி ஒருவர் கடலில் அடித்து செல்லப்பட்ட போது பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளார்.
பாணந்துறை பொலிஸ் பிரிவினை சேர்ந்த அதிகாரிகளான நிமல்சிறி மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் 91046 தசுன் ஆகியோர் உடனடியாக செயற்பட்டு சிறுமியின் உயிரைக் காப்பாற்றியதாக பொலிஸ் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொஸ்பலான பிரதேசத்தினை சேர்ந்த 15 வயது சிறுமியே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி காப்பாற்றப்பட்டு தாயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், சிறுமி தற்கொலை செய்து கொள்ளும் நோக்கத்தில் கடலில் பாய்ந்துள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |