தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளிக்கத் தேவையில்லை
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைக்கு சமூகமளிக்க தேவையில்லை என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.
தனிமைப்படுத்தல் நீக்கப்படும் வரையில் அந்தப் பகுதிகளில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைக்கு திரும்பத் தேவையில்லை என தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளிலிருந்து எவரும் உட்பிரவேசிக்கவும் வெளியேறவும் அனுமதியில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு வரும் தரப்பினர் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட பகுதி ஒன்றிலிருந்து வெளியேறவோ உட்பிரவேசிக்கவோ அனுமதியுண்டு என அவர் தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிச் செயற்படும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கொழும்பு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.