காருக்குள் கஞ்சாவை வைக்க முயன்ற பொலிஸ் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை
கொழும்பு(Colombo) - கொள்ளுப்பிட்டியில் வாகனத்தை சோதனை செய்யும் போது சூட்சமமான முறையில் காருக்குள் கஞ்சாவை வைத்து இளைஞர்களை கைது செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரே பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பணி இடை நீக்கம்
கொள்ளுப்பிட்டி பகுதியில் இளைஞர்கள் குழுவொன்று காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று காரை நிறுத்தி சோதனையிட்டுள்ளதுடன், கான்ஸ்டபிள் ஒருவர் காரில் கஞ்சாவை வைத்து இளைஞர்களை கைது செய்ய முட்பட்டுள்ளார்.

இந்நிலையில், குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவீந்திர அம்பேபிட்டியவின் உத்தரவுக்கமைய குறித்த கான்ஸ்டபிள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
ஆண்டுக்கு ரூ 1 கோடி சம்பளம்... வெறும் 60 நொடிகளில் இந்தியரின் விசாவை நிராகரித்த அதிகாரிகள் News Lankasri