பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது
அம்பாறை - கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய ஜும்மா பள்ளிவாசல் அருகில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றி வளைப்பின் போது பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினரான இளைஞர் ஒருவர் ஐஸ் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(08.05.2026) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பதற்றத்தின் மத்தியில் அடுத்தடுத்த மணிநேரங்கள்! விசிக அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்பு - முடிவிற்காக காத்திருக்கும் தமிழகம்
சந்தேக நபர் தொடர்பிலான தகவல்
கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய ஜும்மா பள்ளிவாசல் அருகில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது குறித்த இளைஞன் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
28 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரான இளைஞனிடம் இருந்து 25 கிராம் 280 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சந்தேக நபர் பொலிஸ் உத்தியோகத்தரின் உறவினர் என்பதுடன் அண்மைக்காலமாக அப்பகுதி இளைஞர்களுக்கு போதைப்பொருட்களை இரகசியமாக விநியோகித்து வருபவர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சுற்றிவளைப்பானது மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.ஏ.எல்.லசந்த களுஆராச்சி வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விடயம் குறித்து மேலதிக விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


ஈஸ்வரியை ஜனனிக்கு எதிராக மாற்றும் கதிர், தர்ஷனார் வரப்போகும் பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam