தற்கொலை செய்துக்கொண்ட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி
புத்தளம் மாவட்டம் உடப்பு பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி தனது வீட்டில் நேற்று அதிகாலை தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடமை முடிந்து வீட்டுக்கு சென்ற நிலையில் தற்கொலை

பள்ளம பிரதேசத்தில் வசித்து வந்த 55 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையான நாராயண முதியன்சலாகே சரத் ஜயந்த என்ற பொலிஸ் அதிகாரியே தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
உப பொலிஸ் பரிசோதகரான இவர் உடப்பு பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றி வந்துள்ளார். இவர் கடமை முடிந்து நேற்று அதிகாலை வீட்டுக்கு சென்ற பின்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது.
இவர் ஆராச்சிக்கட்டு பொலிஸ் நிலையத்திலும் ஏற்கனவே கடமையாற்றியுள்ளதுடன் ஒரு வருடத்திற்கு முன்னரே உடப்பு பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்படடள்ளார்.
சிலாபம் வைத்தியசாலையில் மரணப் பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 11 மணி நேரம் முன்
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan