எப்ஸ்டீனுடனான தொடர்பு குறித்து பில் கிளின்டனின் விளக்கம்
மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விசாரணையில், முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்ரன் முக்கிய விளக்கமளித்துள்ளார்.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் எப்ஸ்டீன் விசாரணை குழுவிற்கு வெள்ளிக்கிழமை வழங்கிய ஆரம்ப அறிக்கையில், எப்ஸ்டீனுடன் தமக்கிருந்த தொடர்பு “குறுகிய அறிமுகம் மட்டுமே” என்றும், அது அவரது குற்றங்கள் வெளிச்சத்துக்கு வருவதற்கு பல ஆண்டுகள் முன்பே முடிவடைந்ததாகவும் கிளின்டன் தெரிவித்துள்ளார்.
எப்ஸ்டீன் அழித்த பெண்கள் மற்றும் சிறுமிகள் நீதி மட்டுமின்றி ஆறுதலையும் பெற வேண்டியவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை
எப்ஸ்டீனுடன் இருந்த தொடர்பு மிகவும் குறுகியது எனவும் அவருடன் சந்தித்த காலத்தில் எந்த தவறான செயல்பாடுகளையும் கவனிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தாம் எதையும் காணவில்லை, எந்த தவறும் செய்யவில்லை,” என கிளின்டன் வலியுறுத்தியுள்ளார்.

பல ஆண்டுகள் கடந்துவிட்டதால், விசாரணையின் போது பல கேள்விகளுக்கு “எனக்கு நினைவில்லை” என்று பதிலளிக்க வேண்டியிருக்கலாம் என்றும் அவர் முன்கூட்டியே தெரிவித்துள்ளார்.
இது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு திருப்தியளிக்காமல் இருக்கலாம் என்றும் கூறினார். மேலும், தனது மனைவி ஹிலரி கிளின்ரன் மீது விசாரணை மேற்கொள்ள முயற்சித்தது “சரியானது அல்ல” என்றும் கிளின்டன் குழுவிடம் தெரிவித்துள்ளார்.
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam