சுழிபுரம் பகுதியில் மோட்டார் செல்
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம், வறுத்தோலை பகுதியில் மோட்டார் செல்லொன்று காணப்பட்டுள்ளது.
வறுத்தோலையிலுள்ள வெற்றுக்காணியில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் துப்பரவு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன்போதே குறித்த வெடிகுண்டு இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து ஜே.சி.பி இயக்குனர் காணி உரிமையாளருக்கு இது குறித்து தகவல் வழங்கியுள்ள நிலையில் அவர் உடனடியாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
குறித்த வெடிகுண்டினை மீட்பதற்கான அனுமதி நீதிமன்றத்திடம் பெற்றுக்கொள்ளப்பட்ட பின் அது அவ்விடத்தில் இருந்து அகற்றப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.