மன்னாரில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது பொலிஸார் சட்ட நடவடிக்கை முன்னெடுப்பு
நாட்டில் கோவிட் தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில் மாவட்ட ரீதியில் கோவிட் பரவலைத் தடுக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத பொதுமக்கள், வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ள மன்னார் பொலிஸாரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை தொடக்கம் மன்னார் பஸார் பகுதியில் விசேட விதமாக பொலிஸார் இணைந்து கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
குறிப்பாக முகக் கவசம் அணியாமல் நடமாடிய, சமூக இடைவெளியைப் பின்பற்றாது செயற்படும் பொதுமக்கள் மீதும், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத வர்த்தக நிலையங்கள் மீதும் மேற்படி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அடிப்படையில் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் பொது இடங்களில் நடமாடிய நபர்கள் மீதும், வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
குறித்த கண்காணிப்பு நடவடிக்கை மன்னார் பஸார் பகுதி, பேருந்து நிலையம் உட்பட
மக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளமை
குறிப்பிடத்தக்கது.