கோவிட் பரவலை தடுக்க கொட்டகலை நகரில் பொலிஸார் கடும் எச்சரிக்கை
கடந்த சில தினங்களாக மலையகத்தின் பிரதான நகரங்களை அண்டிய பகுதியில் அதிகமான கோவிட் தொற்றாளர்கள் காணப்பட்டதன் காரணமாக பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், திம்புள்ள - பத்தனை பொலிஸார் கொட்டகலை நகரில் கோவிட் தொற்று பரவலை தடுக்கும் முகமாக கடைகளில் கோவிட் இன்னும் ஒழியவில்லை ,முகக்கவசம் முறையாக அணிய வேண்டும் ,சமூக இடைவெளி பேண வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய ஸ்டிக்கர்களுடன் கடைகளுக்கு சென்று தெளிவுப்படுத்தி வருகின்றனர்.
இதன்போது கடையில் முறையாக முகக்கவசம் அணியாது இருந்தவர்கள், சமூக இடைவெளி பேணாது இருந்தவர்கள், கடையில் சுகாதார பொறிமுறைக்கு அமைவாக தொற்று நீக்கி மற்றும் பதிவேடுகள் பேணப்படாத கடைகள் உரிமையாளர்கள் மற்றும் பணிபுரிபவர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் சுகாதார பொறிமுறைகளை முறையாக கடைப்பிடிக்காதவர்கள் அனைவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் ,இது தான் இறுதி அறிவித்தல் எனவும் பொலிஸார் கடை உரிமையாளர்களை கடுமையாக எச்சரித்துள்ளனர்.
இதேவேளை வாகனங்களில் சமூக இடைவெளி இல்லாது பயணித்தவர்களையும் கடுமையாக எச்சரித்து இறக்கிவிடப்பட்டுள்ளனர்.






காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, ரூட்டை மாற்றிய பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்... வைரலாகும் வீடியோ Cineulagam
