புத்தளம் ஆராச்சிக்கட்டுவ பொலிஸாருக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை
புத்தளம் (Puttalam) ஆராச்சிக்கட்டுவை பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிலாபம், விஜயகட்டுபொத்த பிரதேசத்தில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று சிறுவர்களை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்திருந்தனர்.
பெற்றோர் முறைப்பாடு
இந்நிலையில் குறித்த சிறுவர்களை பொலிஸார் கடுமையாக தாக்கிக் காயப்படுத்தியதாக அவர்களின் பெற்றோர் சிலாபம் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

காயமடைந்த சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டதற்கான ஆதாரங்களையும் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர்.
இதனையடுத்து ஆராச்சிக்கட்டுவ பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் மகளிர் மற்றும் சிறுவர் பணியக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam