கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அவரின் செயலாளர் ஆகியோருடன் கல்முனையிலிருந்து சென்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தலைமையிலான குழுவினர் விசேட சந்திப்பை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சந்திப்பானது நேற்று (14.05.2024) ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.

சாதகமான பதில்
இது தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளாவது, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகார துஸ்பிரயோகம் , அந்த பிரதேச செயலகத்தின் தற்போதைய தேவையாகவுள்ள கணக்காளர் நியமனம், புதிதாக கணக்கு ஆரம்பித்தல், ஏனைய காணி விடயங்கள் தொடர்பாகவும் விசேடமாக கலந்துரையாடினோம்.

இதற்கு சாதகமான பதிலை ஜனாதிபதி வழங்கியிருந்தார். நாளைய தினம் பிரதமருடன் இது தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் க.சிவலிங்கன், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் கணேஸ் மற்றும் தமிழரசுக்கட்சி ஆலையடிவேம்பு தலைவர் ஜெகநாதன் ஆகியோரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 23 மணி நேரம் முன்
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri